கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இன்றைய விசுவாசிகளின் பிரதான வேலை என்னவென்றால், தேவனைக் கனம் பண்ணுவதுதான். என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன் என்கிறார். “நான் பிதாவானால் என் கனம் எங்கே?” என்று மல்கியா 1:6 வசனத்தில் தேவன் தன்னை அசட்டை பண்ணுகிற ஆசாரியர்களையும் இஸ்ரவேல் மக்களையும் கேட்கிறார். தேவ ஜனங்கள் பிதாவை ஆராதித்தாலும் அவரைக் கனப்படுத்துவதில் குறையுள்ளவர்களாய் அசட்டை செய்கிறார்கள். விக்கிரக வணக்கம் இல்லாவிட்டால் தேவனை —–அசட்டை பண்ணுகிறார்கள். மல்கியா தீர்க்கதரிசியின் நாட்களிலும் இப்படித்தான் நடந்துவந்தது. இன்றைய சமுதாயம் சரியாக இயங்கவேண்டுமானால் தேவனுக்கு பயப்படும் பயம் தேவை. உலக மக்கள் தாங்கள் அறிந்த வெளிச்சத்தின்படி நீதி நியாயங்களின்படி நியாயத்தீர்ப்படைவார்கள். வேதத்தின்படி வசனங்களின் அடிப்படையில் வாழாவிட்டால் விசுவாசிகளுக்கு தண்டனை அதிகம்.
பிதாவை எப்படி கனம் பண்ணவேண்டும்? என்று பார்ப்போம்:
கர்த்தரைக் கனம் பண்ணுவது என்றால் என்ன? சங்.15:4 வசனத்தில், “கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்” தேவனுக்கு வாழ்வில் முதலிடம் கொடுக்க வேண்டும்.
1) கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களை கனம்பண்ணுதல் ஒரு அடையாளம்:
அப்படிச் செய்யும்போது தேவனுக்கு பயப்படுகிறோம். (கூhளை அநயளே லடிர பiஎந சநகநசநnஉந வடி ழுடின) பரிசுத்தவான்களை கனம் பண்ணுதல் என்பது அவர்களோடு ஐக்கியமாக இருத்தல், துன்மார்க்கரோடு தொடர்பு கொள்ளாமல் வாழுதல், துன்மார்க்கரோடு மனம் திறந்து பேசுதல். மற்றபடி சம்பந்தம் கலத்தல், புசித்தல், இருதயத்தை இணைத்தல் போன்றவற்றை விட்டுவிட்டு பரிசுத்தவான்களோடு ஐக்கியமாக வாழுதல். ஆதி.14:20 வசனத்தில், “உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்”. ஆபிரகாம் மெல்கிசேதேக்கு என்ற பிரதான ஆசாரியனோடு ஐக்கியப்பட்டிருந்தான். லோத்து பரிசுத்தவானாகிய ஆபிரகாமை விட்டுப் பிரிந்து சோதோம் என்ற சிற்றின்பம் நிறைந்த உலகத்திற்குப் போனான். பரிசுத்தவான்களுக்குப் பணிவிடை செய்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள். பரிசுத்தவான்களுக்குப் பணமோ, ஐசுவரியமோ, பதவியோ இல்லாவிட்டாலும் அவர்களை கனம்பண்ண வேண்டும்.
2) தரித்திரனுக்குத் தயை செய்கிறவனோ அவரைக் கனம் பண்ணுகிறான்:
நீதி.14:31 வசனத்தில், “தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்”
நீதி.19:17, “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்” தரித்திரனுக்கு இரங்குகிறவன் பிதாவைக் கனம் பண்ணுகிறான். 2கொரி.8:2, “அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்”. ஒவ்வொருநாளும் தேவனுக்கு முன்பாக சரியாக காத்துக்கொள். உன் பங்கை ஏழைகளுக்குச் சரியாக செலவழி. தேவனுக்கு முன்பாக உன் பகுதியில் உண்மையாயிரு.
3) பெற்றோரைக் கனம்பண்ணு:
யாத்.20:12 வசனத்தில், “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக”.
மேலும் மாற்கு 7:11 வசனத்தில் நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிடக் கூடாது. இது தேவனுடைய பார்வையில் குற்றம். பெற்றோரைக் கனம்பண்ணாதவனது காணிக்கையே பிதாவுக்குத் தேவையில்லை. நீதி.30:11ல் தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு.
(நீதி.23:22, நீதி.20:20, நீதி.1:8)
நீதி.23:22, “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே”
நீதி.20:20, “தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம்”
நீதி.1:8, “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.”
4) கர்த்தருடைய ஓய்வுநாளை கனம்பண்ணு:
ஏசாயா 58:13,14, “என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணுவார்…” கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளாக வேண்டுமென்றால் மனமகிழ்ச்சியின் நாளாக ஆசரிக்க வேண்டும்.
5) பொருளால் கனம்பண்ணு, தசம பாகம் கொடுத்து கனம்பண்ணு:
நீதி.3:9, மல்.3:8, மத்.23:23
நீதி.3:9, “உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு”
மல்.3:8, “மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே”
மத்.23:23, “…நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே” என்கிறார். காணிக்கைகளையும் தசமபாகங்களையும் செலுத்தினாலும், நீதியும் இரக்கமும் உடையவர்களாக இருக்கவேண்டும்.
6) வசனத்தைக் கனம்பண்ணு:
வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பார். மதிப்புக்கொடு, கிரியை செய்ய இடம்கொடுக்க வேண்டும். 1சாமு.15:22, “…கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்”. சவுல் புறக்கணிக்கப்பட்டான். அவன் வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்தது. பெயரளவில் இராஜாவாக இருந்தான். அவனைப் பார்க்கிலும் உத்தமனான தாவீதுக்கு ராஜ்ஜியபாரம் கொடுக்கப்பட்டது. மேலும் ஆதி.12:1 வசனத்தில் ஆபிரகாமை நோக்கி, “நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என்றார். அவன் கர்த்தர் சொன்னபடிக் கீழ்ப்படிந்து ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்தான். மேலும் ஆதி.18:19 “கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்”. ஆதாம் கீழ்ப்படியாமல் இருந்தான் துரத்தப்பட்டான்.
7) மேலான அதிகாரங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும்:
ரோமர் 13:1, “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்;” என்று பவுல் கூறுகிறார். குடும்பத்தில் புருஷனுக்கு மனைவி கீழ்ப்படிய வேண்டும். அதிகாரிகளுக்கு எதிர்த்து நிற்காதே.
அன்பு நண்பரே! நாம் கர்த்தரை கனம்பண்ணி வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறார், தேவனுக்குப் பயந்த பரிசுத்தவான்களை கனப்படுத்த வேண்டும், தரித்திரருக்கு தயவுசெய்து கனம்பண்ண வேண்டும், பெற்றோரை கனம்பண்ணி அவரைக் கனப்படுத்த வேண்டும், கர்த்தருடைய ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரித்து கனப்படுத்த வேண்டும். பொருளாலும் விளைவின் முதற்பலனாலும் தசமபாகம் காணிக்கை கொடுத்து கனம்பண்ண வேண்டும், கர்த்தருடைய வசனத்துக்குக் கீழ்ப்படிந்து கனப்படுத்த வேண்டும். மேலும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்கும், மனைவி புருஷனுக்கும் கீழ்ப்படிந்து கனம்பண்ண வேண்டும். இவ்வாறு தேவனைக் கனப்படுத்தும்போது, தேவன் நம் வாழ்வில் மகிமைப்படுவார். “என்னைக் கனப்படுத்துகிறவனை நானும் கனப்படுத்துவேன்” என்று சொல்லியவர் நம்மையும் கனப்படுத்தி உயர்த்துவார். ஆமென்.!